Friday 2 August 2013

நிர்வாண உண்மை

ஓர் அதிகாலை கனவிது
அந்த ஓர் அமைதியான
அலாரமில்லா வேளையில்
அவளது அருகில் நான்..
அவள் பக்கத்தில் நானும்
என் கக்கத்தில் அவளுமாய்
கட்டிலில் கட்டியிருந்த நேரம்...
கண்கள் இரண்டும்
கனவினைத் தேட
கைகள் இரண்டும்
காமனை நாட
கட்டியணைத்த நேரம்
கண்களில் கண்ணீர்த்துளி
கண்ட ஒவ்வோர் துளியிலும்
கண்மணி உனது விழி...!
உன் முதுகுத்தண்டில்
முகம் புதைத்தேன்
' ம் ' என்றாய்...
மூச்சுவிட முடியாமல்
முத்தம் தந்தேன்
' ம்ஹூம் ' என்றாய்...
இன்னும் சொல்லாத
இடங்களிலெலாம்
பல்லால் கடித்தேன்
' ச்சீ ' என்றாய்...
முடிக்கும் வேளையில்
முத்தம் தந்தேன்
போதும் என்றாய்...
முடியாது இனிமேல் என்று
காதலை சொன்னேன்
போதாது என்றாய்...
விடியலைத் தேடும் உலகில்
உன் விழிகளைத் தேடும்
என் விழிகள்
உன் கைகைளைத் தேடும்
என் கைகள்
உன் மார்பினைத் தேடும்
என் தலை
உன் தேகத்தை தேடும்
என் மூச்சுகாற்று
போதவில்லை நமக்கு
இருந்தாலும்
போதுமடி எனக்கு..!
கட்டியணைத்த நேரம்
கனவாக போனாலும்
கண்களில் சிந்திய
கண்ணீர் மட்டும்
கைகளில்  நிக்குதடி ...!
விடிந்ததும் புரிந்தது
நிஜத்தில் நீ இல்லாத
நேரம் கண்டு
நித்திரை கலைந்தேன்...
என் நிர்வாணத்தை
உணர்ந்தேன்.. !


                                                           - தமிழ்ஹாசன்

No comments:

Post a Comment